yugi sethu2
நடிகரான யூகிசேது தற்போது ஒரு புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

Yugi sethu directing a new film with ganesh venkatram – 15 வருடங்களுக்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் வெளியான ‘நையாண்டி தர்பார்’ நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் யூகிசேது.

அதன்பின் விஜயகாந்த் நடித்த ரமணா திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தார். அதன்பின் பஞ்ச தந்திரம், அசல், அன்பே சிவம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அஜித் நடித்த வில்லன் மற்றும் அசல் திரைப்படங்களுக்கு யூகிசேதுவே திரைக்கதை எழுதியிருந்தார்.

yugi sethu

இந்நிலையில் தற்போது நடிகர் கணேஷ் வெங்கட்ராமனை வைத்து அவர் ஒரு புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். கடந்த 1987ம் ஆண்டு கவிதை பாட நேரமில்லை உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால்தான் கதறி அழுதாரா? – 10 வருடங்களுக்கு பின் தந்தையை சந்தித்த லாஸ்லியா

தற்போது அவர் இயக்கி வரும் புதிய திரைப்பம் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.