bigil

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அடுத்த பிரியாங்குப்பத்தில் வசிப்பவர் ருத்ரகிரி. இவரின் மனைவி சர்மிளா. இந்த தம்பதிக்கு 10 வருடங்களாக குழந்தை இல்லை. இந்நிலையில், ஒன்றை வருடங்களுக்கு முன்பு பூஜாஸ்ரீ என்கிற பெண் குழந்தை பிறந்தாள்.

இந்நிலையில், நேற்று தனது மகளை பைக்கில் அமர்த்திக்கொண்டு ருத்ரகிரி கடைக்கு சென்றுள்ளார். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் மிகவும் வேகமாக வந்த இன்பரசு என்கிற வாலிபர் ருத்ரகியின் பைக்கின் மீது மோதினார். இதில், பூஜாஸ்ரீ தூக்கி வீசப்பட்டார். ருத்ரகிரிக்கும் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் சென்னை ராஜூவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால், பூஜாஸ்ரீ மருத்துவ செல்லும் வழியிலேயே இறந்துவிட்டாள். அதேநேரம், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிசைக்கு அனுமதிக்கப்பட்ட இன்பரசு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

விசாரணையில் நேற்று வெளியான பிகில் படத்தை பார்க்க அன்பரசு வேகமாக சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசார் கூறியுள்ளனர். மேலும், தலைமறைவாகவுள்ள இன்பரசுவையும் தேடி வருகின்றனர்.