arrest

சென்னையை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து உல்லாசம் அனுபவித்து விட்டு கம்பி நீட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள காடம்புலியூர் புதுப்பாளையத்தை சேர்ந்தவர் விஜயகாந்த் (28). இவர் செங்கல்பட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அதேபோல், சென்னை அண்ணாநகர் நெல்லிகுப்பத்தை சேர்ந்தவர் நித்யா (26). ஒரு தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கும், விஜயகாந்துக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியது. கடந்த 4 வருடங்களாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். திருமணம் செய்வதாக கூறி நித்யாவை உடல் ரீதியாகவும் விஜயகாந்த் பயன்படுத்தியுள்ளார். அதன்பின் நித்யாவிடமிருந்து விஜயகாந்த் விலக துவங்கினார். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி நித்யா பலமுறை வற்புறுத்தியும் அவர் ஏற்க மறுத்துவிட்டார்.

தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்த நித்யா பண்ருட்டி காவல் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து போலீசார் விஜயகாந்தை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.