one side love
தனது காதலை ஏற்க மறுத்த பள்ளி மாணவியை வாலிபர் கொலை செய்த விவகாரம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Youngster set girl ablaze in kerala both died – கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள காக்கநாடு பகுதியில் வசித்து வருபவர் தேவிகா. அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவரை அதே பகுதியை சேர்ந்த மிதுன் என்ற வாலிபர் ஒரு தலையாய் காதலித்து வந்துள்ளார். பலமுறை வற்புறுத்தியும் அவரின் காதலை தேவிகா ஏற்றுக்கொள்ளவில்லை.

இதனால் ஆத்திரம்டைந்த நிதின் கடந்த புதன் கிழமை, தேவிகாவின் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து அவரை வெளியே அனுப்பும் படி சத்தம்போட்டுள்ளார். அப்போது வீட்டில் தேவிகாவின் தந்தை இருந்துள்ளார். அப்போது, தேவிகா வர அவரின் மீது பெட்ரோலை ஊற்றி மிதுன் பற்ற வைத்துள்ளார். இதில் தேவிகாவின் உடல் பற்றி எரிந்தது. அதையடுத்து மிதுனும் தன் உடல் மீது பெட்ரோலை ஊற்றி பற்ற வைத்துக்கொண்டார். அதைப்பார்த்த தேவிகாவின் தந்தை ஓடி வந்து தேவிகாவின் உடல் மீது எரிந்த தீயை அணைக்க முயன்றார். அதில் அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது.

அதன்பின் அங்கு போலீசார் விரைந்து மூவரையும் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி தேவிகா, மிதுன் இருவருமே மரணமடைந்தனர். இந்த விவகாரம் அந்த பகுதியில் வசிப்பவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.