Yashika Anand in Mother Role

அடுத்து நான் அம்மா வேடத்தில் நடிப்பதாக கூறி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் நடிகை யாஷிகா ஆனந்த்

Yashika Anand in Mother Role : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் கவர்ச்சி நடிகையாக திரையுலகில் வலம் வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் பங்கேற்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். இதுவரை கவர்ச்சி வேடங்களில் மட்டுமே நடித்து வந்த யாஷிகா ஆனந்த் தற்போது டோட்டலாக மாறியுள்ளார். சல்ஃபர் என்ற திரைப்படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். இதுவே ரசிகர்களுக்கு ஆச்சரியமான ஒன்றாக இருக்கும் நிலையில் அடுத்த ஒரு படத்தில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிப்பதாக கூறியுள்ளார்.

அந்தப் படத்தில் ஹீரோவாக எஸ் ஜே சூர்யா நடிப்பதாகவும் இனி படங்களில் கவர்ச்சி மட்டும் காட்டாமல் வித்தியாச வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க முடிவெடுத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். யாஷிகா ஆனந்த் அம்மா வேடத்தில் நடிப்பதாக கூறிய தகவல் அவரது ரசிகர்களை கொஞ்சம் ஷாக்காக்கியுள்ளது.