video

ஓடும் பேருந்தில் இருந்து ஒரு பெண் தூக்கி வீசப்பட்ட சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக அரசு பேருந்து ஓட்டுனர்கள் வாகனத்தை மெதுவாகத்தான் இயக்குவார்கள். ஆனால், அரசு பேருந்துகளை இயக்கும் சில ஓட்டுனர்கள் வேகமாக இயக்கி விபத்தை ஏற்படுத்தும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து கொண்டுதான் இருக்கிறது.

கடந்த 16ம் தேதி குமாரபாளையத்தை சேர்ந்த கோகிலா(55) என்கிற பெண்மணி சேலத்திலிருந்து திருப்பூர் செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளார். அந்த பேருந்து கோட்டைமேடு பகுதியில் சென்று கொண்டிருந்த போது ஒரு வளைவில் வேகமாக திரும்பி சென்றது. அப்போது, பேருந்தில் நின்று கொண்டிருந்த கோகிலா நிலை தடுமாறி பேருந்திலிருந்து தூக்கி வெளியே வீசப்பட்டு, சாலையோரத்தில் தேங்கியிருந்த மழை நீர்சகதியில் போய் விழுந்தார். அதன்பின் பொதுமக்கள் அவரை வீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது.

 

YouTube video