baby theft
ரயில் நிலையத்தில் தாயின் அருகில் உறங்கிக்கொண்டிருந்த குழந்தையை ஒரு பெண்ணும், ஆணும் திருடி சென்ற சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Woman Stealing Baby From Sleeping Mother : கடந்த பல வருடங்களாகவே இந்தியாவில் குழந்தைகள் திருடப்பட்டு வருகின்றன.

அரசு மருத்துவமனைகள், ரயில்வே நிலையங்கள், பேருந்து நிலையங்கள் ஆகிய இடங்களில்தான் குழந்தைகள் அதிகம் திருடப்படுகின்றன.

சமீபத்தில் உத்தரபிரதேசம் மாநிலம் மொரதாபாத் மாவட்டத்தில் உள்ள கால்ஷாஷீத் எனும் பகுதியில் உள்ள ஒரு பேருந்து நிலையத்தில் ஒரு பெண் தனது 8 மாத பெண் குழந்தையுடன் உறங்கி கொண்டிருந்தார்.

அப்போது அவரது அருகில் இருந்த ஒரு பெண் குழந்தையை திருடி சென்றுவிட்டார்.

தனது குழந்தை காணவில்லை என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த அப்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

பேருந்து நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை போலீசார் சோதனை செய்த போது அப்பெண் குழந்தையை திருடி சென்றது தெரியவந்தது.

அப்பெண் அருகில் ஒரு ஆணும் நிற்கிறார். எனவே, இருவரும் சேர்ந்தே திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.