snake bite
படுக்கை அறையில் பாம்புகள் இருப்பதை கவனிக்காமல் அமர்ந்த பெண்ணுக்கு நடந்த விபரீதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Woman sits on mating snakes get bitten to death – உத்திரபிரதேசம் கோரக்பூரில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருபவர் கீதா. இவரின் கணவர் ஜெய் சிங் தாய்லாந்தில் பணிபுரிந்து வருகிறார். எனவே, தினமும் அவர் செல்போனில் மனைவியிடம் பேசுவதுண்டு.

கடந்த புதன் கிழமை ஒரு ஆண் மற்றும் பெண் பாம்பு எப்படியே அவர் வீட்டினுள் நுழைந்து படுக்கை அறைக்கு சென்று ஒன்றோடு ஒன்று பிண்ணி பிணைந்து இனப்பெருக்கத்தில் ஈடுபட்டிருந்தது.

வெளியானது கைதி பட படங்கள் மட்டும் இல்லை கதையும் தான் – படக்குழு அதிர்ச்சி .!

அப்போது கணவரிடம் செல்போனில் பேசிக்கொண்டிருந்த கீதா படுக்கை அறையில் சென்று அமர்ந்துள்ளார். படுக்கை விரிப்பின் கீழ் பாம்புகள் இருந்ததால் கீதா அவற்றை பார்க்கவில்லை. எனவே, இரு பாம்புகளும் அவரை கடுமையாக கடித்துள்ளன. அவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்த அவரை மீட்டனர். மேலும், இரு பாம்புகளையும் அடித்துக் கொன்றனர். கீதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.