ரயில் வந்தபோது, தண்டவாளத்தில் படுத்து ஒரு மூதாட்டி உயிர் தப்பிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Woman escape from passing train viral video – கர்நாடகா மாநிலம் கலபுராகி மாவட்டம் சித்தபுரா பகுதியில் வசித்து வரும் மூதாட்டி முனிபாய் (65). இவர் சமீபத்தில் அந்த பகுதியில் உள்ள ரயில்வே நிலையம் சென்று தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது எதிரே ஒரு சரக்கு ரயில் வந்துவிட்டது. இதைக்கண்ட பலரும் கூச்சலிட்டனர்.
டேய் என்னடா பண்ணிவச்சிருக்கீங்க – இணையத்தை கலக்கும் ஜெயம் ரவியின் வைரல் வீடியோ
எனவே சுதாரித்த மூதாட்டி என்ன செய்வதென்று தெரியாமல் அப்படியே உயிரை கையில் பிடித்துக்கொண்டு தண்டவாளத்தில் படுத்துவிட்டார். அவர் மீது சரக்கு ரயில் ஏறி சென்றது. சுமார் 1.26 நிமிடம் சரக்கு ரயில் அவரை கடந்து சென்றது. இதைக்கண்ட பொதுமக்கள் பீதியில் உறைந்து போயினர்.
எனினும், அந்த மூதாட்டி எந்த காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த வீடியோ பார்ப்பவர்கள் மனதை பதைபதைக்க செய்துள்ளது.
Video Courtesy to www.wildfilmsindia.com