விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் வெற்றியடைய வேண்டி விஜய் ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் வருகிற 25ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், நாகை வடக்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மயிலாடுதுறையில் உள்ள மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அப்போது, மாவட்ட தலைவர் சி.எஸ்.குட்டி கோபி உள்ளிட்ட சில விஜய் ரசிகர்கள் கோவிலில் தரையில் அமர்ந்து மண் சோறு சாப்பிட்டு பிரார்த்தனை செய்தனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.