Vijay Director Opens Up
Vijay Director Opens Up

குரானா நிவாரண நிதிக்காக நடிகர்கள் பணம் தரவில்லை என பேசும் மக்களுக்கு கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார் இயக்குனர் பேரரசு.

Vijay Director Opens Up : உலகம் முழுவதும் புராண வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் இந்த வயதில்தான் பாதிக்கப்பட்டவர்கள் கிட்டத்தட்ட 1500 வரை வந்து விட்டது.

இதனால் மத்திய மாநில அரசுகள் நிவாரண நிதிக்காக மக்களிடம் உதவி கேட்டு உள்ளது. மக்கள் திரையுலகப் பிரபலங்கள் ஆகியோர் முதலமைச்சர் நிதிக்கு பணம் அனுப்பி வருகின்றனர்.

இது ஒருபுறமிருக்க பெரிய நடிகர்களான ரஜினி, கமல், அஜித், விஜய் இவர்கள் பணம் கொடுக்காதது பற்றியும் பலர் விவாதித்து வருகின்றனர்.

சிம்பிளா சொன்னாலும் மாஸாக அப்டேட் கொடுத்த வினோத் – வலிமை படம் இப்படித் தான் இருக்கும்!

இந்த நிலையில் இது குறித்து இயக்குனர் பேரரசு தன்னுடைய ஹலோ பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவில் நடிகர்கள் கொடுக்கும் பணம் அவர்கள் உழைத்து சம்பாதித்தது. நடிகர்கள் எவ்வளவு கொடுக்கிறார்கள் என பார்க்கும் மக்கள் அரசியல்வாதிகள் என்ன செய்கிறார்கள் என்பதை பாருங்கள். ஓட்டுக்காக பணம் கொடுக்கும் அரசியல்வாதிகள் கொரானா நிதிக்காக என்ன செய்கிறார்கள் என்பதை கவனியுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.