அசுரனுக்கு பின் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் புதிய திரைப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ள்ளது.
பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் என அழுத்தமான கதைகளை தேர்ந்தெடுத்து திரைப்படங்களை இயக்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்ததோடு, தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக இயக்குனர் வெற்றிமாறன் மாறியுள்ளார்.
தனுஷ் நடிப்பில் இவர் இயக்கிய அசுரன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி விமர்சனரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்த திரைப்படங்களின் பட்டியலில் அசுரனும் சேர்ந்துள்ளது.
இந்நிலையில், எல்ரெட் குமாரின் ஆர்.எஸ். இன்போடைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை அடுத்து வெற்றிமாறன் இயக்கவுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்த தயாரிப்பு நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் குறித்த தகவல் விரைவில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சூரியை வைத்து படம் இயக்கப்போவதாக வெற்றிமாறன் அறிவித்திருந்த நிலையில், இப்படத்தில் அவரே ஹீரோவாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
We are extremely happy to announce our next project, #Productionno14 with world renowned director @VetriMaaran sir.
Produced by @elredkumar
The cast and crew details will be updated shortly. pic.twitter.com/QCTTQppu3d
— RS Infotainment (@rsinfotainment) October 16, 2019