பிக்பாஸ் டைட்டிலை வெல்ல ஆரி பயன்படுத்திய ராஜ தந்திரங்களை போட்டு உடைத்துள்ளார் பாடகர் வேல் முருகன்.
Velmurugan About Bigg Boss Title Winner : தமிழ் சினிமாவின் பிரபல பாடகராக வலம் வருபவர் வேல்முருகன். இவர் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் பங்கேற்றார்.
இந்த சீசனில் பங்கேற்ற இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து இரண்டாவது ஆளாக வெளியேறினார். தற்போது நிகழ்ச்சி முடிந்து ஆரி டைட்டில் வின்னர் ஆக தேர்வாகியுள்ள நிலையில் பாடகர் வேல்முருகன் பேட்டி ஒன்றில் ஆரி குறித்து பேசியுள்ளார்.
ஆரி பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்வையாளர்கள் கண்ணோட்டத்திலிருந்து விளையாடியதாக கூறியுள்ளார். வெளியிலிருந்து பார்ப்பவர்கள் எப்படி பார்ப்பார்கள் எப்படி யோசிப்பார்கள் என்பதை யோசித்து கடைசி வரை விளையாடி வென்றுள்ளார் என கூறியுள்ளார்.
ஒருவேளை ஆரி பிக் பாஸ் வீட்டில் இல்லை என்றால் யார் டைட்டிலை வென்று இருப்பார்கள் எனக் கேட்டதற்கு நான் பிக் பாஸ் வீட்டில் இருந்திருந்தால் நானே வென்று இருப்பேன் என தன்னம்பிக்கையுடன் கூறியுள்ளார்.
மேலும் பாலாஜி முருகதாஸ் கோவத்தை மட்டும் குறைத்து இருந்தால் அவரும் டைட்டிலை வென்றிருக்க வாய்ப்பிருக்கு என பேசியுள்ளார்.