இந்த லாக் டவுனில் புதிய தொழில் ஒன்றை தொடங்கியுள்ளார் வரலட்சுமி சரத்குமார்.
Varalaxmi Sarathkumar Starts New Business : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வரலட்சுமி சரத்குமார். அடித்தால் நாயகியாக தான் நடிப்பேன் என இல்லாமல் வில்லியாகவும் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
மேலும் சமூக பிரச்சனகளுக்கும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். ஜெயராஜ் பினிக்ஸ் ஆகியோரின் கொலையில் நீதி கிடைக்க வேண்டும் என குரல் கொடுத்து வருகிறார்.
போடா போடி படத்துக்கு பிறகு 4 ஆண்டுகள் நடிக்காதது ஏன்? – அதிர்ச்சி உண்மையை வெளியிட்ட வரு.!
அதேபோல் புதுக்கோட்டையில் 7 வயது சிறுமி மூவரால் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவத்திற்கு தன்னுடைய எதிர்ப்பையும் கண்டனத்தையும் பதிவு செய்திருந்தார்.
இப்படிப்பட்ட நாட்டில் வாழ்வதைவிட அனைவருக்கும் கொரானா வந்து சாகலாம் எனவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
அதேசமயம் இந்த லாக் டவுனில் புதிய தொழில் ஒன்றை தொடங்கி இருப்பதாகவும் வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.
அதாவது சீஸ் வியாபாரத்தை அவர் தொடங்கியுள்ளார். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தொடங்கிய நிலையில் அதற்குள் 100 பேர் புராடக்டை ஆர்டர் செய்திருப்பதாகவும் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.