சீரியல் நடிகருடன் வனிதா வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Vanitha With Serial Actor Arvind : தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகராக வலம் வருபவர் விஜயகுமார். இவருடைய மூத்த மகள் தான் வனிதா விஜயகுமார். சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் அதன் பின்னர் சில படங்களில் நடித்தார்.
நடிகர் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டு விவாகரத்து செய்தார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அதன் பின்னர் இரண்டாவது திருமணம் செய்து ஒரு மகள் பெற்றுக்கொண்டார். அதுவும் விவாகரத்தில் முடிந்தது. மூன்றாவதாக டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் உடன் காதலில் இருந்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக இணைந்து பல பேட்டிகளை கொடுத்தனர். ஆனால் அந்த காதலும் முறிவில் முடிந்தது.
இதனையடுத்து விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் பங்கேற்று பிரபலமானார். மூன்றாவது சீசனை தொடர்ந்து விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். மேலும் கிட்டத்தட்ட ஐந்து படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த நிலையில் இவர் சீரியல் நடிகர் அரவிந்த் உடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாக ஐந்தாவது புருஷனா என நெட்டிசன்கள் கலாய்க்க தொடங்கியுள்ளனர். இதனையடுத்து சீரியல் நடிகர் அரவிந்த் ஒரு போட்டோ எடுத்தது குற்றமா என இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். போட்டோ எடுத்தது குற்றம் அல்ல அத யாரோட எடுக்கணும்னு தெரியாம எடுத்தது தான் குத்தம் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
ரசிகர்களின் இந்த பதிவிற்கு அரவிந்த் வனிதா மிகவும் அன்பாக பழக கூடியவர் என சர்ட்விகேட் கொடுத்து அவரை பாராட்டியுள்ளார்.