சந்திரலேகா திரைப்பட படப்பிடிப்பில் விஜயுடனான தனது அனுபவம் பற்றி வனிதா விஜயகுமார் பேட்டியளித்துள்ளார்.
நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் வனிதா விஜயகுமார். பிக்பாஸ் வீட்டில் யாரையும் பேசவிடாமல் சண்டைக்கோழியாக வலம் வந்தார். இவர் இருக்கும் வரையே பிக்பாஸ் நிகழ்ச்சி சுவாரஸ்யமாக சென்றது. தமிழ் சினிமாவில் சந்திரலேகா திரைப்படம் மூலம் விஜய்க்கு ஜோடியாக அவர் அறிமுகமானார்.
இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் விஜயுடனான தனது அனுபவத்தை அவர் பகிர்ந்து கொண்டார். சந்திரலேகா முதல் நாள் படப்பிடிப்பில் நான் மேக்கப் இல்லாமல் என் அறையில் இருந்தேன். அங்கே வந்த விஜய் ‘உன் அக்கா எங்கே?’ எனக்கேட்டார். அவர் ஊரில் இருக்கிறார் என்றேன். ‘அதுக்குள்ள ஊருக்கு போய்ட்டாங்களா?’ எனக்கேட்டார். மேக்கப் இல்லாமல் இருந்ததால் அவருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை என்பது பின்னர்தான் எனக்கு தெரியவந்தது.
அதன்பின் என்னிடம் வந்து ‘என்ன கிளாஸ் படிக்கிற?’ எனக்கேட்டார். அதற்கு நான் ‘8ம் வகுப்பு படிக்கிறேன்’ எனக்கூறினேன். அதற்கு ‘அடப்பாவிங்களா 8ம் கிளாஸ் படிக்குற பொண்ண ஷூட்டிங் கூட்டிட்டு வந்துட்டாங்க’ எனக்கூறி சிரித்தார் என வனிதா விஜயகுமார் தெரிவித்தார்.