வனிதா பிக் பாஸ் வீட்டிற்குள் ஆட கூடாத ஆட்டம் ஆடி வருகிறார், அதற்கான காரணம் என்ன என்பதை முதல் ஆளாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பாத்திமா பாபு கூறியுள்ளார்.
Vanitha Vijayakumar Attitude : தமிழ் சின்னத்திரையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் உள்ள 16 போட்டியாளர்களில் அனைவரின் வெறுப்பையும் சம்பாதித்து இருப்பவர் வனிதா தான்.
இவர் ஏன் இப்படி ஆடுகிறார்? என்ன காரணம் என்பதை பாத்திமா பாபு பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார். கேமராவுக்கு பின்னால் நன்றாக தான் பேசுவார்.
ஆனால் கேமராவுக்கு முன்னாள் ஏன் அப்படி மாறி விடுகிறார் என தெரியவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவரது நண்பர்கள் இப்படியெல்லாம் இருந்தால் தான் உன்னை அதிக நேரம் காட்டுவார்கள் என்று கூறினார்களோ என்னவோ என பேசியுள்ளார்.
மேலும் அவர் வாழ்க்கையில் புரிதல் இல்லை அதனால் தான் எல்லாம் தெரிந்தது போல ஆடுகிறார். மீரா தன்னை பற்றி அனைவரும் பெருமையாக பேச வேண்டும் என நினைக்கிறார்.
அவர் சத்ருகுருவுடன் தியானம் செய்ததாக கூறினார். ஆனால் அது உண்மை இல்லை என கூறியுள்ளார்.