நான்கே மாதத்தில் பீட்டர் பாலை பிரிந்துள்ளார் நடிகை வனிதா. அதற்கான காரணம் என்ன என்பது குறித்து வீடியோ ஒன்றில் கண்ணீருடன் பேசியுள்ளார்.
Vanitha Breakup WIth Peter Paul : தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக சர்ச்சைக்குரிய ஒருவராக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். இவருக்கு ஏற்கனவே இரண்டு திருமணங்கள் நடந்து விவாகரத்தான நிலையில் சில மாதங்களுக்கு முன்பு பீட்டர் பால் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
பீட்டர் பால் இது ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது தெரிந்தும் அவரை திருமணம் செய்து கொண்டது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தது.
அந்த சர்ச்சைகளை எல்லாம் எதிர்த்து பீட்டர் பாலுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த வனிதா தற்போது பீட்டர் பாலை பிரிந்துள்ளார். அதற்கான காரணம் என்ன என்பதை வீடியோ ஒன்றில் பேசியுள்ளார்.
அதாவது பீட்டர் பால் மதுவுக்கு அடிமையாகி போன ஒருவர். அதை மறைத்து தன்னை திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளார். அதிலிருந்து மீண்டு வர சொல்லி பலமுறை கூறியும் அதை அவர் ஏற்கவில்லை. குடித்தால் உயிருக்கே ஆபத்து என மருத்துவர் கூறியும் அவர் குடித்தார்.
கோவாவில் இருந்து சென்னை வந்ததும் அவரை காணவில்லை. பிறகு தேதி பிடித்து வீட்டுக்கு அழைத்து வந்தோம். அவருடைய பெரிய அண்ணன் இறந்து விட்டார் அந்த செய்தி கேட்ட பிறகு அண்ணனை பார்க்க செல்கிறேன் எனக் கூறி விட்டு சென்றவர் மீண்டும் வரவில்லை. அவருடைய அண்ணனின் இறுதி அஞ்சலிக்கு அவர் செல்லவில்லை என்று கூறியுள்ளார். இதுதான் எங்கள் இருவருக்கும் இடையேயான பிரிவுக்கு காரணம் என வனிதா தெரிவித்துள்ளார்.