Vaayadi Petha Pulla Song Create New Record – Fans Happy
Sai Pallavi Decision on Upcoming Movies : மலையாள சினிமாவில் பிரேமம் என்ற படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் சாய் பல்லவி. அதற்கு முன்னதாக ஜெயம் ரவியின் தாம் தூம் திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்துள்ளார்.
மேலும் இவர் தமிழில் தியா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தார். அதன் பின்னர் தனுசுடன் மாரி 2, சூர்யாவுடன் என் ஜி கே ஆகிய படங்களில் நடித்துள்ளார்.தமிழ் தெலுங்கு மலையாளம் என மூன்று மொழியிலும் பிஸியாக நடித்து வரும் சாய் பல்லவிக்கு கவர்ச்சியான வாய்ப்புகள் குவிய தொடங்கியுள்ளனர்.
ஆனால் அவர் இதுகுறித்து அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அதாவது எப்போதும் நான் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன்.எனக்கு பெரிய நடிகையாக வேண்டும் என்ற ஆசையெல்லாம் கிடையாது. படங்களில் என்னை பார்ப்பவர்கள் அவர்களின் குடும்பத்தில் ஒரு பெண்ணாக பார்க்க வேண்டும்.
அப்படியான கதாபாத்திரத்தில் தான் நடிக்க ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.இருபது வருடத்திற்கு பிறகு என்னுடைய குழந்தைகள் என் படத்தை பார்த்தாலும் ஜாலியாக பார்க்கவேண்டும் முகம் சுழிக்க கூடாது என கூறியுள்ளார்.
என் உறவினர்கள் என் படத்தை பார்க்கும்போது பெருமைப்பட வேண்டும் அப்படியான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை என தெரிவித்துள்ளார். எனவே எப்போதும் கிளாமரான கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.