மணிரத்தினம் தயாரிப்பில் தனா இயக்கத்தில் சரத்குமார், ராதிகா, விக்ரம் பிரபு, சாந்தனு, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் வானம் கொட்டட்டும். இந்த படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.
Vaanam Kottatum Review :
படத்தின் கதைக்களம் :
கொலை வழக்கில் சரத்குமார் சிறைக்கு சென்று விட அதன் பின்னர் ராதிகா ஒத்த ஆளாக போராடி குடும்பத்தை காப்பாற்றுகிறார். பின் சிறையில் இருந்து சரத்குமார் வெளியே வருகிறார். கொலை செய்யப்பட்டவரின் மகன் சரத்குமாரை பழி வாங்க காத்துக் கொண்டிருக்கிறார். அதன் பின்னர் என்ன நடந்தது? என்னவெல்லாம் நடக்கிறது? என்பது தான் இப்படத்தின் கதை.
படத்தை பற்றிய அலசல் :
நடிப்பு :
சரத்குமார், ராதிகா ஆகியோர் இப்படத்தின் மிக பெரிய பலம். சரத்குமார் ஒரு வெள்ளந்தி மனிதராக அப்படியே வாழ்ந்துள்ளார். சரத்குமாருடன் போட்டி போட்டு நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் ராதிகா.
விக்ரம் பிரபு, சாந்தனு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா என அத்தனை பேரும் அவர்களின் நடிப்பை அழகாக வெளிப்படுத்தியுள்ளனர்.
சாந்தனு – ஐஸ்வர்யா ராஜேஷின் காம்பினேஷன் பக்காவாக அமைந்துள்ளது. விக்ரம் பிரபு – மடோனா இடையே நடக்கும் சந்திப்பு, உரையாடல் போன்றவை ரசிக்க வைத்தாலும் சில இடங்களில் இதெல்லாம் நம்புற மாதிரி இல்லையே என்ற பீலிங்.
தொழில்நுட்பம் :
இசை :
சித் ஸ்ரீராம், கே-வின் பின்னணி இசை பிரமாதம், பாடல்கள் அருமை.
ஒளிப்பதிவு :
ப்ரீத்தா ஜெயராமனின் ஒளிப்பதிவு காட்சிகளை தெளிவாக படமாக்கியுள்ளது.
இயக்கம் :
தனாவின் கதை, திரைக்கதை அழகு, ஒவ்வொரு காதாபாத்திரங்களையும் சரியாக பயன்படுத்தியுள்ளார்.
தம்ப்ஸ் அப் :
1. சரத்குமார், ராதிகா என அனைவரின் நடிப்பு
2. பின்னணி இசை
3. பாடல்கள்
தம்ப்ஸ் டவுன் :
1. நம்ப முடியாத சில காட்சிகள்
2. யூகித்து விட கூடிய கிளைமேக்ஸ்
3. இரண்டாம் பாதியின் வேகம்