Udhaya Request to PM

தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வருபவர் உதயா. நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் பல படங்களை தயாரித்துள்ளார். மேலும் செக்யூரிட்டி என்ற பெயரில் குறும்படத்தை இயக்கி நடித்து இருந்தார்.

Udhaya Request to PM ,: ராணுவ வீரர்களை மையமாகக் கொண்டு உருவான இந்த குறும்படம் பல்வேறு சர்வதேச விருதுகளை வென்றது. சீனாவை எதிர்த்து போராடி உயிர் விட்ட தமிழக ராணுவ வீரர் பழனி என்பவரை பாராட்டியும் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் இந்தக் குறும்படம் உருவாகி இருந்தது.

தற்போது நடிகர் உதயா பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை ஒன்றை வைத்து மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.

இராணு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ” பரம்வீர் சக்ரா “விருதினை இவ்வருடம் குடியரசு தினத்தன்று ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த போர்க்களத்தில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் அவில்தார் திரு பழனி அவர்களுக்கு இவ்விருதினை வழங்கிட வேண்டும் என கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

அந்த கோரிக்கை மனுவின் நகலை தமிழ் மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர், முனைவர் திரு. L.முருகன் அவர்களிடம் இன்று வழங்கியுள்ளார்.