கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து கடலில் விவரங்களை அனுப்பி வைக்குமாறு அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும் கூட்டுறவுத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
TN Govt Order to Society Banks : தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு சிறப்பாக செயலாற்றி வருகிறது.
இவர்கள் ஆட்சிக் காலம் முடிவடைந்து வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் கடந்த வாரம் கூட்டுறவு வங்கிகளில் 6 பவுன் வரை அடகுவைத்து பெற்ற கடன் ரத்து செய்யப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அனைத்து மாவட்ட கூட்டுறவு வங்கிகளுக்கும் ஜனவரி 31 ஆம் தேதி வரை நிலுவையில் உள்ள நகை கடன் விவரங்களை அனுப்பி வைக்குமாறு கூட்டுறவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.