TN CM Press Meet in Pallikaranai

சென்னையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட இடங்களில் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கூறியுள்ளார்.

TN CM Press Meet in Pallikaranai : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த வருடம் வங்க கடலில் உருவான நிவர் புயல் சென்னை மற்றும் புதுச்சேரி இடையே கரையைக் கடந்து கடலூர் விழுப்புரம் திருவண்ணாமலை வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

இந்த புயல் காரணமாக சென்னையில் தொடர்ந்து பல இடங்களில் கனமழை பெய்ததால் முடிச்சூர் தாம்பரம் செம்மஞ்சேரி பள்ளிக்கரணை காரப்பாக்கம் போன்ற பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது.

இன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நேரில் ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்படும் இடங்களில் மழைநீர் தேங்காத வகையில் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அவர்கள் வாக்குறுதி அளித்துள்ளார்.

மேலும் எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலின் இதுகுறித்து குற்றச்சாட்டுக்களை கூறி வருவதைப் பற்றி கேள்வி அடிப்பதற்கு மு க ஸ்டாலின் அவர்கள் சென்னையின் மேயராக இருந்த போது என்ன செய்தார் என்று பதில் கேள்வி எழுப்பியுள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

தமிழக முதல்வரிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வியும் அவர் அளித்த பதிலும் இதோ இந்த வீடியோவில் நீங்களே பாருங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.