EPS About Kerala Flight Accident

TN CM About Kerala Flight Accident : கேரளாவில் நடந்த விமான விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தும் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருப்பவர்கள் பூரண குணம் பெற வேண்டுமெனவும் தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்

நேற்று (7.8.2020), வந்தே பாரத் திட்டத்தின் கீழ் துபாயிலிருந்து சுமார் 191 நபர்களுடன் கேரள மாநிலம், கோழிகோடு விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்திய விமானம், தரையிரங்கும் போது விபத்துக்குள்ளாகியதில், விமானி உள்பட 18 நபர்கள் உயிரிழந்துள்ளதாகவும், பெரும்பாலான பயணிகள் காயமடைந்துள்ளதாகவும் வந்த செய்தி எனக்கு மிகுந்த வேதனை அளித்தது.

இந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்விபத்தில் பெரும்பாலானோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளனர் என்ற செய்தியை அறிந்தேன். இவர்கள் அனைவரும் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.