காவல் நிலையத்திற்கு கிருமிநாசினி தெளிக்கும் இயந்திரத்தை வழங்கியுள்ளனர் விஜய் ரசிகர்கள்.
Theni Vijay Fans Service : சீனாவின் ஹூகான் மாகாணத்தில் கடந்த வருடம் தோன்றிய கோரானா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது.
இந்த வைரஸ் தாக்கத்துக்கு இந்தியாவும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை மூன்றரை லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
இவர்களில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். சுமார் 8000 பேர் கொரானாவின் கோரப் பிடியில் இருந்து மீள முடியாமல் இறந்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் இந்த வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களை காக்க போராடி வரும் முன்கள பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள் பாதிக்கப்பட்டு வருவதும் வாடிக்கையாகி வருகிறது.
இப்படியான நிலையில் தேனி மாவட்ட விஜய் ரசிகர்கள் அம்மாவட்டத்தில் உள்ள காவலர் அலுவலகத்திற்கு கிருமிநாசினி தெளிக்கும் இயந்திரத்தை அன்பளிப்பாக வழங்கியுள்ளனர்.
விஜய் ரசிகர்களின் இந்த செயல் மக்கள் மத்தியிலும் காவல்துறையினர் மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.