கொரானா எதிரொலியால் தியேட்டர்கள் இழுத்து மூடப்படுவதாக முதலமைச்சர் பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளார்.
Theaters Closed in Kerala : சைனாவில் உதயமான கொரானா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. பல நாடுகளை அச்சுறுத்திய இந்த வைரஸ் தற்போது இந்தியாவிலும் கொஞ்சம் கொஞ்சமாக பரவ தொடங்கியுள்ளது.
அதிலும் குறிப்பாக கேரளாவில் அதி வேகத்தில் பரவி வருகிறது. இதனால் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் மார்ச் 31 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து தேர்வுகளையும் தள்ளி வைத்துள்ளார்.
அதே போல் தியேட்டர்களும் மார்ச் 31-ம் தேதி வரை இழுத்து மூடப்படுவதாக அறிவித்துள்ளார்.
கொரானா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தவே இப்படியொரு அதிரடி உத்தரவை பிறப்பிரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் கேரளாவில் மார்ச் மாதம் முடியும் வரை படங்கள் ரிலீஸ் ஆவதும் சந்தேகமே.