இந்திய வானிலை மையம் இன்று காலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அடுத்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை நிறைவடைவதற்கான சூழல் நிலவிவருகிறது.
இதனால் வடகிழக்கு பருவ மழை துவங்குவதற்கான காலநிலை நிலவுகிறது. அக்.22 ஆம் தேதி கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தம் உருவாக வாய்ப்பிருப்பதால், வரும் அக்.20 முதல் 22 வரை தமிழகம், புதுச்சேரி, கேரள மற்றும் கர்நாடகாவின் தெற்கு உள் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
பல இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த 24மணி நேரத்தில் சென்னையில் 6 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.