நிதி பற்றாக்குறையிலும் மாணவர்களுக்கான நலத் திட்டங்கள் நிறுத்தப்படாமல் தொடர்வது தமிழக மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tamilnadu Scheme for Studenets 2020 : தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு சிறப்பான ஆட்சியை வழங்கி வருகிறது. இந்திய அளவில் சிறந்த ஆட்சி நடைபெறும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது.
கொரோனா, புயல் பாதிப்பு என அனைத்து இக்கட்டான சூழ்நிலையில் தமிழகத்தில் சிறப்பான நடவடிக்கைகள் மூலமாக மக்களை பெரும் துயரில் இருந்து பாதுகாத்து வருகிறது.
இது போன்ற இயற்கை பேரழிவுகளால் தமிழகத்திற்கு நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டாலும் தமிழக மாணவர்களுக்கான நலத் திட்ட பணிகள் எதுவும் கைவிடாமல் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஆம், 2020-2021ம் கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு இலவச மிதி வண்டகள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்சியில் முதலமைச்சர் 9 மாணவகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினார்.
தமிழக அரசின் இலவச மிதி வண்டி வழங்கும் திட்டத்தின் கீழ், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு இலவச மதி வண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, நடப்பாண்டில் 2,38,456 மாணவர்கள், 3,06,710 மாணவியர்களுக்கு என மொத்தம் 5,45,166 மாணவ மாணவியர்களுக்கு இலவச மிதி மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது. 11ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியருக்கு 214 கோடியே 79 லட்சம் ரூபாய் செலவில் 5,45,166 விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது.
தொற்றுநோய் காலத்தில், மற்ற பல செலவீனங்கள் இருந்த பட்சத்திலும், நிதிபற்றாகுறை இருக்கும் இந்த காலகட்டத்திலும், மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கும் இந்த திட்டத்தை இந்த ஆண்டு முதல்வர் துவக்கி வைத்தது, அனைவர் மத்தியிலும் பாராட்டை பெற்றுள்ளது, மாணவர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.