விஜய் மற்றும் சிம்பு ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக தமிழக அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

TamilNadu Government Announcement of Theatre Opening : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

அதேபோல் நடிகர் சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஈஸ்வரன் திரைப்படமும் பொங்கல் விருந்தாக ஜனவரி 14-ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த இரண்டு படங்களும் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் தமிழக அரசு இன்னும் திரையரங்குகளில் 100% இருக்கைக்கு அனுமதி அளிக்காமல் இருந்து வந்தது.

இப்படியான நிலையில் தற்போது தமிழக அரசு 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நடிகர் சிம்பு கூட இன்று காலை 100 சதவீத இருக்கைக்கு அனுமதி கேட்டு அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் தளபதி விஜய் மற்றும் சிம்பு ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த இரண்டு படங்களிலம் வசூலில் மிகப்பெரிய அளவில் மாஸ் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.