Tamilnadu Governet Action Against on Land grabbing

நில உரிமையாளர்களிடம் இருந்து அபகரிக்கப்பட்டு இருந்த ரூபாய் 3835 கோடி மதிப்பிலான நிலங்களை தமிழக அரசு மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Tamilnadu Governet Action Against on Land grabbing : தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு மிகவும் துரிதமாக செயல்பட்டு வருகிறது. தமிழக மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து திறம்பட செயலாற்றி வருகிறது.

தமிழக மக்களுக்காக தொடர்ந்து பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வரும் தமிழக அரசு தற்போது நில உரிமையாளர்களிடம் இருந்து அபகரிக்கப்பட்ட ரூபாய் 3835 கோடி மதிப்பிலான 6 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மற்றும் 43.6 லட்சம் வீட்டுமனைகள் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த 2011 ஆம் ஆண்டு மாவட்டவாரியாக தமிழகத்தில் 39 நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவுகள் 25 சிறப்பு நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டது.

இதனையடுத்து கடந்த ஜூலை மாதம் வரை மொத்தம் 4 ஆயிரத்து 526 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இதுவரை 3,903 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நில அபகரிப்பு வேலைகளில் ஈடுபட்ட 70 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என போலிஸ் குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. மீட்கப்பட்ட இந்த நிலங்கள் மற்றும் வீட்டு மனைகள் 3,319 உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த நடவடிக்கையை தமிழக மக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.