தமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை அறிவிக்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.
Tamilnadu Governement About Nivar : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்துள்ள நிலையில் வங்கக்கடலில் நிவார் புயல் உருவாகி உள்ளது.
இந்த புயல் தற்போது புதுச்சேரியில் இன்று 360 கிலோ மீட்டர் தொலைவில் சென்னைக்கு 420 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.
நாளை பிற்பகல் இந்த புயல் மகாபலிபுரம் புறம் மற்றும் காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் என கூறப்பட்டுள்ளது.
இதனால் தமிழகம் முழுவதும் பாதிக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ள இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் கடலூர், காரைக்கால், பெரம்பலூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு உதவி எண்களை அறிவித்துள்ளது.
மேலும் புயல் கரையை கடக்க உள்ளதால் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக நாளை தமிழகம் முழுவதும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் அரசு அலுவலர்களுக்கு மட்டும் பணிகளில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது.