விஜய் ஏன் குரல் கொடுக்கவில்லை எல்லாம் படத்தில் மட்டும் தானா என ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.
Tamil Cinema Fans Blast Vijay : மருத்துவக் கல்வி பயில நீட்தேர்வு அவசியம் என கூறி இந்திய மருத்துவ கவுன்சில் ஒவ்வொரு வருடமும் நீட் தேர்வை நடத்தி வருகிறது. நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது வாடிக்கையாகி வருகிறது.
இந்த வருடம் கூட நீட் தேர்வு காரணமாக 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இதனால் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என ஆளும் அதிமுக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறது.
அதுமட்டுமல்லாமல் நடிகர் சூர்யா உட்பட பல்வேறு பிரபலங்கள் நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.
ஆனால் தளபதி விஜய் இதுவரை இது பற்றி வாய் திறக்கவில்லை. படங்களில் அரசியல் பேசி வரும் விஜய் நிஜத்தில் நீட் தேர்வுக்கு எதிராக ஏன் குரல் கொடுக்கவில்லை. அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகளை விமர்சிப்பது எல்லாம் வெறும் படத்தில் மட்டும் தானா?? என மற்ற நடிகர்களின் ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த விமர்சனங்களால் தளபதி ரசிகர்கள் நீட் தேர்வால் அனிதா தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த போது தளபதி விஜய் அவருடைய வீட்டிற்குச் சென்று ஆறுதல் கூறினார் என்பதை மறந்து விடாதீர்கள் என்றும் கூறி வருகின்றனர்.