யார் யாரோ கேஸ் போடுறாங்க, ஆனால் முதலில் நான் தான் கேஸ் போட்டு இருக்கணும் என பிகில் குறித்து அதிர்ச்சிகர பேட்டி அளித்துள்ளார் சுசீந்திரன்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியான திரைப்படம் பிகில்.
தீபாவளிக்கு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படமும் கதை திருட்டு பிரச்சனைகளில் சிக்கியது.
இந்நிலையில் தற்போது பிரபல இயக்குனர்களில் ஒருவரான சுசீந்திரன் அளித்துள்ள பேட்டி ஒன்றில் பிகில் படத்தின் கதை என்னுடையது என யார் யாரோ கேஸ் போடுகிறார்கள், முதலில் நான் தான் போட்டிருக்க வேண்டும்.
உண்மையாகவே என்னுடைய கதையும் பிகில் கதையும் ஒரே மாதிரி தான் என பேசி அதிர்ச்சி கொடுத்துள்ளார் சுசீந்திரன்.