Suseenthiran And Nidhhi Agerwal Opens Up about Eeshwaran Movie
SAC Makkal Iyakkam Party : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
ரசிகர்கள் அனைவரும் இந்த படத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். அதேசமயம் தளபதி விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று ரசிகர்களும் கோரிக்க வைத்து வந்த வருகின்றனர்.
இப்படியான நிலையில்தான் சில மாதங்களுக்கு முன்னர் தளபதி விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் புதிய கட்சியைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார்.
இந்த தகவல் இணையத்தில் கசிய தளபதி விஜய் இந்த கட்சிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்னுடைய பெயரை பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என தன் தந்தையையே எச்சரித்திருந்தார்.
தளபதி விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் அவர்களும் தன்னுடைய கணவர் எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் தன்னை ஏமாற்றி கையெழுத்து பெற்று விட்டதாக குற்றம் சாட்டினார். இதனால் இந்த கட்சி பதிவு செய்ததை ரத்து செய்த எஸ்ஏ சந்திரசேகர். சமீபத்தில்கூட பொங்கல் கழித்து ஒரு நல்ல செய்தி வரும் என தெரிவித்திருந்தார்.
இப்படியான நிலையில் தற்போது எஸ் ஏசி மக்கள் இயக்கம் என்ற பெயரில் புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார். இதனால் மீண்டும் விஜய் மற்றும் விஜய் ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர்.