பாலவாக்கத்தில் நடைபெற்ற பள்ளி திறப்பு விழா ஒன்றில் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா பங்கேற்றுள்ளனர்.
Surya Jyothika in School Opening Ceremony : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. பழம்பெரும் நடிகரான சிவகுமாரின் மூத்த மகனாக இருந்தாலும் கடுமையான போட்டிகளையும் சவால்களையும் சந்தித்து இன்று முன்னணி நடிகராக நடித்துள்ளார்.
இவர் வெறும் நடிகராக மட்டுமல்லாமல் அகரம் பவுண்டேஷன் என்ற அமைப்பின் மூலமாக ஏழை எளிய மக்களின் கல்விக்கு உதவி வருகிறார். தயாரிப்பாளராகவும் தொடர்ந்து பல படங்களை தயாரித்து வருகிறார். தொகுப்பாளராகவும் விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் சூரரை போற்று. சுதா கொங்கரா இயக்கத்தில் அமேசான் ப்ரைம் வீடியோ வழியாக வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.
இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யா அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இத்திரைப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இதற்கிடையில் நடிகர் சூர்யா கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பூரண குணமடைந்து நலமுடன் வீடு திரும்பி இருந்தார்.
நடிகர் சூர்யா சமீபத்தில் ரசிகர் ஒருவரின் திருமணத்தில் பங்கேற்று இருந்தார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி இருந்ததை அடுத்து வேறு எந்த புகைப்படமும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் தற்போது சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து சென்னை பாலவாக்கம் பகுதியில் உள்ள பள்ளியின் திறப்பு விழாவில் பங்கேற்றுள்ளனர்.
இவர்கள் இருவரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டிங்கில் இடம்பெற்றுள்ளன.
சூர்யாவின் நடிப்பில் பாண்டியன் திரைப்படம் மட்டுமல்லாமல் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல், கௌதம் மேனன் இயக்கத்தில் நவரசா என்ற வெப் சீரிஸ் என தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் தொடர் தோல்வியில் இருந்த சூர்யாவிற்கு சூரரைப்போற்று திரைப்படம் மாபெரும் திருப்புமுனையாக அமைந்துள்ளது என்பது மறுக்க முடியாத ஒன்று.