கர்ணன் கொடுத்த வெற்றி காரணமாக சூர்யா அடுத்த படத்தில் மாரி செல்வராஜ் உடன் இணைய இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
Suriya With Mari Selvaraj Direction : தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவர் அடுத்ததாக கர்ணன் என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார்.
தனுஷ் நடிப்பில் வெளியான இந்தத் திரைப்படமும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இப்படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் அடுத்ததாக துருவ் விக்ரமை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார்.
கர்ணன் திரைப்படம் பெற்ற வெற்றியின் காரணமாக அடுத்ததாக சூர்யா மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள வாடிவாசல் திரைப்படத்தையும் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தான் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.