சுரேஷ் ரெய்னா வீட்டில் நடந்த மரணம் குறித்து வருத்தத்துடன் சூர்யா பதிவிட்டுள்ளார்.
Suriya Tweet About Suresh Raina Issue : இந்திய கிரிக்கெட் அணியில் முக்கிய கிரிக்கெட் வீரராக இருந்து வருபவர் சுரேஷ் ரெய்னா. தோனி, விராட் கோலிக்கு அடுத்ததாக இவருக்கும் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.
இவர் சில தினங்களுக்கு முன்னர் தன்னுடைய மாமா வீட்டிற்குள் கார்பன் நபர்கள் புகுந்து அவரை கொலை செய்து விட்டதாகவும் தன்னுடைய உறவினர்கள் சிலருக்கு படுகாயம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும் அந்த குற்றவாளிகள் யார் என்பதை விரைவில் கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு பஞ்சாப் மாநில அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார்.
இதனையடுத்து தற்போது இதுகுறித்து சூர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சுரேஷ் ரெய்னா வீட்டில் நடந்த இந்த சோகத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
மேலும் பஞ்சாப் மாநில அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சூர்யாவும் கோரிக்கை வைத்துள்ளார்.
சுரேஷ் ரெய்னா வீட்டில் இந்த சம்பவம் ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.