அஜித் மற்றும் சூர்யா நடிக்க மறுத்த திரைப்படம் ஒன்று செம ஹிட்டடித்த கதை தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர்கள் அஜித், சூர்யா. இவர்கள் வளர்ந்து வந்த காலகட்டத்தில் வெளியாகி மெகா ஹிட்டான திரைப்படம் ஆனந்தம்.
லிங்குசாமி இயக்கத்தில் உருவாகி இருந்த இந்த படத்தில் மம்மூட்டி, முரளி, அப்பாஸ் மற்றும் பலர் நடித்திருந்தனர். முதலில் இப்படத்தில் அப்பாஸ் வேடத்தில் நடிக்க அஜித்திடம் தான் கேட்டுள்ளனர்.
ஆனால் அஜித் அப்போது காதல் மன்னனாக வலம் வந்த காலகட்டம் என்பதால் நடிக்க மறுத்துள்ளார். இதனையடுத்து இந்த வாய்ப்பு சூர்யாவை தேடி சென்றுள்ளது.
அவரோ மூன்றாவது ஹீரோவாக நானா? வாய்ப்பே இல்லை என தட்டி விட அதன் பிறகு தான் சாக்லேட் பாய் அப்பாஸுக்கு சென்றுள்ளது.
படம் வெளியாகி செம ஹிட்டானதும் இன்று வரை இப்படம் ரசிக்கும் வகையிலும் இருக்கிறது என்பது யாராலும் மறுக்க முடியாது, தமிழ் நடிகை ஸ்னேகாவும் இப்படத்தின் மூலமாக தான் திரையுலகிற்கு அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.