மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரியில் சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளே செல்வீர்களா என கேட்டதற்கு பதில் அளித்துள்ளார்.
வைல்ட்கார்ட் என்ட்ரியில் சுரேஷ் : தமிழ் சின்னத்திரை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் சுரேஷ் சக்ரவர்த்தி.
இவர் நிகழ்ச்சியின் இறுதிவரை தொடர்வார் என எதிர்பார்த்தால் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் சுரேஷ் சக்ரவர்த்தி தன்னுடைய யூடியூப் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். அப்போது கடந்த சீசனில் வனிதா வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே சென்றது போல உங்களை அழைத்தால் நீங்கள் செல்வீர்களா என கேட்கப்பட்டுள்ளது.
அதற்கு பதிலளித்த சுரேஷ் சக்ரவர்த்தி கண்டிப்பாக பிக்பாஸ் வீட்டிற்கு செல்வேன், அனைவரையும் வச்சி செய்வேன் என கூறியுள்ளார்.
போட்டியாளர்களை பார்த்து உங்களுக்கு பயமா எனக் கேட்டதற்கு அவர்கள் எல்லாம் பல்லு புடுங்கன பாம்பு மாதிரி அவர்களைப் பார்த்து நான் ஏன் பயப்பட வேண்டும். அவர்கள் தான் என்னை பார்த்து பயந்தார்கள் என தெரிவித்துள்ளார்.
இதனால் சுரேஷ் சக்ரவர்த்தி மீண்டும் பிக் பாஸ் வீட்டில் வைல்ட் கார்ட் என்ட்ரியில் உள்ளே செல்ல அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.