Suresh Chakravarthy About Bigg Boss

சுரேஷ் சக்ரவர்த்தி பதிவால் விஜய் டிவி அக்ரிமென்ட் வைத்து மிரட்டியதா என்ற கேள்வி சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.

Suresh Chakravarthy About Bigg Boss : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் கடந்த வாரம் நிறைவடைந்தது.

இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றிருந்தவர் சுரேஷ் சக்ரவர்த்தி. இவர் எதிர்பாராத விதமாக பிக்பஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பின்னர் கிராண்ட் பினாலே நெருங்கிக் கொண்டிருந்த போது போட்டியாளர்கள் அனைவரும் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர். ஆனால் சுரேஷ் சக்ரவர்த்தி மட்டும் இறுதியாக உள்ளே சென்றார்.

சுரேஷ் சக்கரவர்த்தியின் வருகையை ரசிகர்கள் ஆரம்பத்திலேயே எதிர்பார்த்த நிலையில் விஜய் டிவி அவரை புறக்கணித்து இருந்தது.

இதனையடுத்து சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளே சென்றதும் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.

இப்படியான நிலையில் தற்போது இவர் ட்விட்டர் பக்கத்தில் அக்ரிமெண்ட்கள் சில சமயம், பல சமயங்களில் நம்மை காயப்படுத்துகின்றன.

அதற்கு ஆண்டவர் தான் மருந்தாக இருந்தார் என பதிவிட்டுள்ளார். சுரேஷ் சக்ரவர்த்தியின் இந்த பதிவால் விஜய் டிவி அக்ரிமென்ட்டை வைத்து இவரை மிரட்டியதா என்ற கேள்வியை ரசிகர்கள் முன்வைத்த வருகின்றனர்.