Sundari Pandian Blast Bigg Boss Aari

ஆரி தான் ஜெயிக்கணும் அதுபோலத்தான் கடந்த 8 வாரங்களாக நிகழ்ச்சி கொண்டு செல்லப்பட்டது கமல்ஹாசனின் மீதும் விஜய் டிவி மீதும் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார் ரம்யா பாண்டியனின் சகோதரி.

Sundari Pandian Blast Bigg Boss Aari : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சி பிக் பாஸ். முதல் 3 சீசன் வெற்றியை தொடர்ந்து நான்காவது சீசனும் பல்வேறு தடைகளைத் தாண்டி நேற்றுடன் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.

பிக்பாஸ் நான்காவது சீசனின் டைட்டில் வின்னர் ஆக ஆரி 16 லட்சம் ஓட்டுகளுடன் வெற்றி பெற்றார். ரம்யா பாண்டியன் மூன்றாவது ரன்னர் ஆக வெளியேறினார்.

இதுகுறித்து ரம்யா பாண்டியனின் சகோதரி சுந்தரி பாண்டியன் பேட்டி ஒன்றில் கடந்த 8 வாரங்களாக ஆரி ஜெயிக்க வேண்டும் என்பதுபோலத்தான் நிகழ்ச்சி கொண்டு செல்லப்பட்டது.

தளபதி விஜய் செல்வதுபோல பாலிடிக்ஸ் கேம் விளையாடாதீங்க. விளையாடும் இடத்தில் பாலிடிக்ஸ் பண்ணாதீங்க என பேசியுள்ளார்.

ஆரி ஜெயிப்பதை போல அடுத்த தேர்தலில் கமல் ஜெயிக்க வேண்டும். கமல் முழுக்க முழுக்க தன்னுடைய அரசியல் பிரச்சாரத்திற்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சிதான் இது என பேசியுள்ளார்.

ரம்யா பாண்டியனின் சகோதரர் பரசு பாண்டியன் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றபோது ஆரி தான் என் தலைவன் என பேசினார். ரம்யா பாண்டியன் வெற்றிபெற 30 சதவீத வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்தார்.

அப்படி இருக்கையில் தற்போது ரம்யா பாண்டியன் சகோதரி சுந்தரி பாண்டியன் இவ்வாறு நிகழ்ச்சியை விமர்சனம் செய்து பேசியிருப்பது நெட்டிசன்கள் மத்தியில் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.