பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின் சுசித்ரா பதிவிட்ட முதல் பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Suchithra 1st Tweet After BB Eviction : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ்.
இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. ரேகா வேல்முருகன் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோரைத் தொடர்ந்து நிகழ்ச்சியிலிருந்து நேற்று சுசித்ரா வெளியேற்றப்பட்டார்.
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சுசித்ரா கமல்ஹாசனுடன் பேசும்போது ரியோ, நிஷா மற்றும் அர்ச்சனா ஆகியோருக்கு இரண்டு முகங்கள் இருப்பதாகவும் கேமராவில் இருக்கும் போது அவர்கள் என்னவெல்லாம் பேசிக் கொள்வார்கள் என்பது பற்றியும் கூறியிருந்தார்.
மேலும் சிவானி, சம்யுக்தா, ரமேஷ் ஆகிய தன்னிடம் கொஞ்சமும் ஒட்டிக் கொள்ளவில்லை எனவும் கூறியிருந்தார். சிவானி மற்றும் சித்ரா இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தன.
இந்த நிலையில் நடிகர் ஆரி காதல் கண்ணை மறைக்கிறது என கூறியது அடுத்து பாலா காதலும் இல்லை ஒன்னும் இல்லை என கூறினார். இதுகுறித்து மீம் ஒன்றை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சுசித்ரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டு சூப்பர் என பாராட்டியுள்ளார்.
இதனைப் பார்த்த நெட்டிசன்கள் சிவானி மேல அவ்வளவு காண்டா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.