பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து மரணமடைந்த சுபஸ்ரீயின் மரணம் தொடர்பாக அவரின் அலுவலக நண்பர் தெரிவித்துள்ள கருத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Subashree id card and sitting place picture – சமீபத்தில் சென்னை பள்ளிக்கரணை சாலையில் வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர் ஒன்று கீழே விழுந்து சுபஸ்ரீ என்கிற இளம்பெண் பரிதாபமாக பலியானார். இதற்கு நாடு முழுவதும் கண்டனக்குரல்கள் எழுந்தன. சமூக வலைத்தளங்களிலும் இந்த விவகாரம் அதிகமாக விவாதிக்கப்பட்டது. பொறியியல் படிப்பை முடித்து மென்பெறியாளராக பணிபுரிந்து வந்த சுபஸ்ரீ வீட்டிற்கு செல்லும் வழியில் மரணமடைந்தார்.
இந்நிலையில், அவர் பணிபுரியும் அன்பழகன் சேகர் என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில் சுபஸ்ரீயின் அடையாள அட்டை, அவரின் வழக்கமாக அமரும் இருக்கை ஆகிய புகைப்படங்களை பகிர்ந்து ‘சுபஸ்ரீ என்னுடன் பணிபுரிபவர்.. அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும்’ என பதிவிட்டுள்ளார். மேலும், அவர் பகிர்ந்துள்ள புகைப்படத்தில் ‘ நாங்கள் அவளை நேசித்தோம். ஆனால், கடவுள் எங்களை விட அவரை அதிகமாக நேசித்துவிட்டார்’ என எழுதப்பட்டுள்ளது.
She is my office colleague. May her soul ‘REST IN PEACE’???????? #WhoKilledShubashree pic.twitter.com/vKYrnMeK0W
— Anbazhagan Sekar (@anbazhagan16) September 13, 2019