STR About Master and Eswaran Release

மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் ஆகிய திரைப்படங்கள் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் அதிரடி அறிக்கை ஒன்றை சிம்பு வெளியிட்டுள்ளார்.

STR About Master and Eswaran Release : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் வரும் ஜனவரி 13ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளியாகிறது.

இந்த படத்தோடு சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஈஸ்வரன் திரைப்படம் ஜனவரி 14-ஆம் தேதி வெளியாகி மோத உள்ளது.

இப்படியான நிலையில் தற்போது சிம்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் சிம்பு ரசிகர்கள் மாஸ்டர் திரைப்படத்தைப் பாருங்கள், விஜய் அண்ணா ரசிகர்கள் ஈஸ்வரன் திரைப்படத்தைப் பாருங்கள்.

நாங்கள் உங்களால் வளர்ந்தவர்கள், திரையரங்குகளால் வளர்ந்தவர்கள். அதனால் தான் படத்தை திரையரங்கில் மட்டுமே வெளியிட வேண்டும் என காத்திருந்தோம்.

தளபதி விஜய் அண்ணா நினைத்திருந்தார் படத்தை எப்போதோ ஆன்லைனில் வெளியிட்டு இருக்கலாம். ஆனால் தன்னை வளர்த்துவிட்ட மீடியாவுக்காக ஒரு வருடம் காத்திருந்து படத்தை ரிலீஸ் செய்கிறார்.

எனக்கும் அதே சிந்தனை தான். மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் ஆகிய படங்களின் ரிலீஸ் திரையரங்குகளில் நிலையை மாற்றி அமைக்கும் என நம்புகிறேன். மக்கள் பழையபடி திரையரங்குகளுக்கு வருவார்கள் என நம்புகிறோம்.

நாள்கள் கடற்கரைகள் போன்றவை முழுவதுமாக திறக்கப்பட்டு விட்டன. அதைப்போல் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டால் மிக நன்றாக இருக்கும்.

50 சதவீத இருக்கைகளுடன் படத்தை வெளியிட்டால் நிச்சயம் லாபத்தை ஈட்டுவது என்பது கடினமான ஒன்றாகவே இருக்கும். இதனால் தயவுகூர்ந்து தமிழக முதல்வர் 100% இருக்கைக்கு வெகு விரைவில் அனுமதி அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.