STR About Maanaadu

மாநாடு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டது ஏன் என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

STR About Maanaadu : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு.

வெங்கட்பரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா, பாரதிராஜா, மனோஜ் பாரதிராஜா என பல நடிகர் நடிகைகள் இந்த படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர்.

சிம்புவின் பிறந்தநாளான நேற்று மாநாடு படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. முற்றிலும் வித்தியாசமான முறையில் வெளியான இந்த டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இந்த படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற முஸ்லிம் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது இது குறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.

மதங்களின் மீது பெரியதாக நம்பிக்கை இல்லை. சிவனை ரொம்ப பிடிக்கும், மற்ற மத கடவுள்களையும் வணங்குவேன். இந்த மதம் அந்த மதம் என்றெல்லாம் எனக்கு மதத்தின் மீது பெரிய அளவில் நம்பிக்கை இல்லை.

பொதுவாக முஸ்லிம்கள் மீதான கண்ணோட்டம் வேறு மாதிரியாக உள்ளது. அவர்களுக்காக எதையாவது செய்ய வேண்டும் என நினைத்தேன். அப்போதுதான் அதற்கேற்றாற்போல மாநாடு கதை தேடி வந்தது. இதனால் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன் என தெரிவித்துள்ளார்.

ஒரு நல்ல படத்தை மொழி எல்லாம் பார்க்காமல் இந்தியாவே கொண்டாடும். அப்படி ஒரு படமாக மாநாடு இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.