murder
செம்பாக்காத்தில் 6 வயது சிறுமியை சித்தியே கொலை செய்து மாடியிலிருந்து தூக்கி வீசிய சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Step mother killed her daughter in chennai – சென்னைக்கு அருகேயுள்ள செம்பாக்கத்தில் வசித்து வருபவர் பார்த்திபன். இவரின் 6 வயது பெண் குழந்தை மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து இறந்து விட்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. ஆனால், அவரின் சித்தியே மாடியிலிருந்து குழந்தையை தூக்கி வீசி கொலை செய்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

பார்த்திபனின் முதல் மனைவிக்கு பிறந்த பெண் குழந்தை ராகவி. தற்போது அவளுக்கு 6 வயது ஆகிறது. உடல்நலக்குறைவால் முதல் மனைவி இறந்து விட சில வருடங்களுக்கு முன்பு சூர்யகலாவை அவர் திருமனம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

தளபதி விஜய் பார்வையின் அர்த்தம் புரிந்தது – பிரபல நடிகர் ஓபன் டாக் .!

இந்நிலையில், சூர்யகலா மீண்டும் கர்ப்பமானார். ஆனால், ஏற்கனவே 2 குழந்தைகள் இருப்பதால் இந்த குழந்தை வேண்டாம் கலைத்து விடு எனக்கூறியுள்ளார். ஆனால், சூர்யகலா மறுத்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சூர்யகலாவின் கோபம் ராகவி மீது திரும்பியது. ராகவியால்தான் கணவர் தனது குழந்தையை கலைக்க சொல்கிறார் என ஆத்திரமடைந்த அவர் ராகவியை மாடிக்கு அழைத்து சென்று கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளர். அதன்பின் 2 மாடியிலிருந்து தூக்கி கீழே வீசியுள்ளார்.

இந்த விவகாரம் அந்த பகுதியில் வசிக்கும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சூர்யகலாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து குறிப்பிடத்தக்கது.