State Election Commission :
சென்னை: உள்ளாட்சி தேர்தலுக்காக சென்னை மாநராட்சியில் 5,720 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து வருகிறது. இந்நிலையில் தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் வார்டுகள் பிரிக்கப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறுகையில், சென்னை மாநகராட்சியில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்காக வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டு வருகிறது.
மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்கும் சிம்பு – எந்த படத்தில் தெரியுமா?
சென்னையில் உள்ள 200 வார்டுகளுக்கும் மொத்தம் 5,720 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இது தொடர்பான வரைவு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது என கூறினார்.
மேலும் ஆண் வாக்காளர்களுக்காக 78 வாக்குச்சாவடிகளும், பெண் வாக்காளர்களுக்காக 78 வாக்குச்சாவடிகளும் உருவாக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார். எனவே அனைத்து வாக்காளர்களுக்கும் சேர்த்து 5,564 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வரும் 10-ஆம் தேதி அன்று பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்றும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல் தெரிவித்துள்ளார்.
விரைந்து உள்ளாட்சி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது குறிப்பிடதக்கது.