SriHari Activities after Vanitha's 3rd Marriage
SriHari Activities after Vanitha's 3rd Marriage

வனிதாவின் மூன்றாவது திருமணத்தால் அவரது மகன் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

SriHari Activities after Vanitha‘s 3rd Marriage : சினிமாவில் நடிகையாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். இவர் கடந்த ஜூன் 27ஆம் தேதி பீட்டர் பால் என்பவர் மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு கடந்த 2000 ஆம் ஆண்டில் ஆகாஷ் என்பவருடன் திருமணம் நடந்தது.இவர் சமுத்திரம் படத்தின் சரத்குமாரின் தங்கையை கணவராக நடித்திருப்பார். அதேபோல் சொக்கத் தங்கம் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார்.

இவர்களுக்குத் திருமணம் ஆனதும் ஸ்ரீ ஹரி என்ற மகனும் ஜோவிகா என்ற மகளும் பிறந்தனர். அதன் பின்னர் இவரை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

சிம்பு இல்லன்னா எனக்கு சினிமா வாழ்க்கையே இல்லை, அதற்கு நன்றிக் கடனாக தான்..? – பிரபல இயக்குனர் இயக்குனர் புகழாரம்

இரண்டாவது திருமணமும் வனிதாவிற்கு நிலைக்கவில்லை.அவருடனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவரையும் விவாகரத்து செய்து தற்போது மூன்றாவது திருமணம் செய்துள்ளார்.

அவருடைய மூன்றாவது தெரிந்தால் மூத்த மகன் ஸ்ரீஹரி வீட்டை விட்டு வெளியே செல்வதில்லை. அவருடைய நண்பர்களுக்கும் இவருடைய திருமணம் பற்றியும் தெரியும் என்பதால் அதைப் பற்றிக் கேட்பார்கள் என அவர்களிடம் பேசுவதை குறைத்துக் கொண்டுள்ளார்.

நாங்களும் ஸ்ரீஹரி இருக்கும் சமயத்தில் இது குறித்து பேசுவதில்லை.

மேலும் சமூக வலைதளப் பக்கங்களில் போட்டோவை பதிவிட்டால் கூட நம்மை அடையாளம் கண்டு அதைப் பற்றிக் கேட்பார்கள் என்ற ஒரே காரணத்தால் சமூக வலைதளப் பக்கங்களில் இருந்து விலகி இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது 23 வயதாகும் ஸ்ரீஹரி தன்னுடைய அப்பாவுடன் தனியாக வசித்து வருகிறார். அப்போது ஸ்ரீஹரி வீட்டிலேயே முடங்கி உள்ளாராம்.

அவருக்கு என்ன சொல்லி அவனது மனநிலையை மாற்றுவது என தெரியவில்லை என வனிதாவின் முதல் கணவர் ஆகாஷ் வருத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.