கண் பார்வை இழந்த ரசிகர் ஒருவர் பேருக்கு எஸ்பிபி கொடுத்த சர்ப்ரைஸ் பலரையும் நெகிழ வைத்துள்ளது.
SPB Surprised to His Blind Fan : இந்திய சினிமாவின் பிரபல பின்னணி பாடகராக வலம் வருபவர் எஸ் பி பாலசுப்ரமணியம். பாடகராக மட்டுமல்லாமல் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
மேலும் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கொரானா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இவர் நேற்று உயிரிழந்தார்.
இவருடைய மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இசை உலகிற்கு பேரிழப்பு. பாடும் நிலா உறங்கி விட்டது என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது எஸ்பிபி அவர்கள் கண்பார்வையற்ற தன்னுடைய ரசிகருக்கு திடீர் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
பேட்டி ஒன்றில் அந்த ரசிகர் எஸ்பிபி பற்றி பேசிவிட்டு அவருடைய பாடல் ஒன்றை பாடுகிறார். அப்போது பாலசுப்ரமணியம் அவர்கள் திடீரென என்ட்ரி கொடுத்து பாடி சர்ப்ரைஸ் கொடுக்கிறார்.
பின்னர் தன்னுடைய ரசிகரை கட்டி அணைத்து அன்பை பரிமாறிக்கொள்ள அந்த ரசிகர் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே செல்கிறார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பலரையும் நெகிழ வைத்து வருகிறது.
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யுங்க