அஜித் வந்தா என்ன? வரலைன்னா என்ன? எப்படி இருந்தாலும் அவர் என்னுடைய நண்பர் என தெரிவித்துள்ளார் எஸ்பிபி சரண்.
SPB Charan About Ajith : இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்தவர் எஸ் பி பாலசுப்ரமணியம். ஏர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
இவருடைய மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களின் மூலமாக தங்களது இரங்கல்களை பதிவு செய்து வந்தனர்.
தளபதி விஜய், எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்களை அடக்கம் செய்த இடத்திற்குச் சென்று இறுதி மரியாதை செலுத்தினார். இதனால் அஜித் எஸ்பிபி உடலுக்கு அஞ்சலி செலுத்த வரவில்லை என்ற பேச்சு சமூக வலைதளங்களில் வலுக்கத் தொடங்கியது.
இது குறித்த விவாதம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் எஸ்பிபி சரண் அவர்கள் பேட்டி ஒன்றில் இது குறித்து பேசியுள்ளார்.
தல அஜித் அவர்கள் வந்தால் என்ன? வரலைன்னா என்ன? அதை எதற்கு பெரிதாக்குகிறீர்கள்?? அது ஒரு வதந்தினு தெரிந்தும் அதை ஏன் பரப்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அஜித் வந்தாலும் வரலனாலும் அவர் என்னுடைய நண்பர் என்று தெரிவித்துள்ளார்.
இதோ அந்த வீடியோ https://www.facebook.com/219306928906533/posts/833277060842847/